சமம்
பிறப்பால் அனைவரும் சமம்
மனிதநேயம் சீர்குலைந்தது
உயர்வு தாழ்வால்
சாதிக்கும் சாதனைகளால் மட்டுமே
பெருமையும் சிறுமையும் -இதில்
எங்கே நுழைந்தது
சாதி,மதம்,இனம் என தெரியலையே?????
ஐம்பூதங்கள் என்ன
உயர்வு தாழ்வா பார்க்கிறது-இதில்
காற்று மட்டும் உயர்வு பார்த்தால்
எத்தனை பேர்
உயிர்வாழ முடியும்??...
பணம் பணம் மட்டும்
இருந்தால் போதுமா ?
குணம் வேண்டாமா ?
அரசே உயர்வு தாழ்வின் தொடக்கம்
அரசின் முத்திரை பெற்ற
சாதி சான்றிதழுக்கே
முன்னுரிமை
முதலுரிமையும் கூட !!!
தாழ்த்தப்பட்ட தாழ்வுள்ளம்
தனிமையில் தள்ளாடுவது
தாங்கமுடியவில்லை
உயர்வு தாழ்வில்லா
உலகம் வேண்டும்
அன்பின் அடிப்படையில்
அன்னை ஒன்று
தெய்வம் ஒன்று
தேசப்பற்றும் ஒன்று
பிறப்பால் அனைவரும் சமம்
வந்தே மாதரம் !!....
Comments
Post a Comment