Thursday, May 16, 2013

மரம்
























பூமிதான் என் தாய்

மழைக்காலங்கள்தான்
என் தாயின் பிரசவ காலங்கள்

கஷ்டங்களை உடைத்துவிட்டு வருகிறேன்
மரமாக செடியாக கொடியாக

சந்தோசங்களை தருகிறேன்
காயாக பூவாக கனியாக

மனிதா என்னை வேறோடு
எடுக்க நினைக்காதே !!

உன் வருங்காலத்திற்கு
நிழற்குடை நான்தானே !!!

என்னை அழிக்க நினைக்காதே
உன் சந்ததிகளுக்கு தாகம் தீர்க்கும்
தண்ணீர் குடம் நான் தான்  !.....

No comments:

Post a Comment