ருசியான மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ கிராம்
நல்லெண்ணெய் – 50 மில்லி.
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி 150 கிராம்
புளி கரைக்க தண்ணீர்
மீன் – 1/2 கிலோ கிராம்
நல்லெண்ணெய் – 50 மில்லி.
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி 150 கிராம்
புளி கரைக்க தண்ணீர்
பச்சை மிளகாய் – 3
மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
மல்லிப்போடி – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
சிறிதளவு மல்லி
மல்லிப்போடி – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
சிறிதளவு மல்லி
கறிவேப்பிலை இலைகள்
செய்முறை
*மீனை நன்றாக தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
*மீன் வாடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் கழுவுவதற்கு முன் மீனில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கழுவினால் வாடை குறைந்துவிடும்.
*புளியை நன்றாக ஊறவைத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்
*சிறிது மல்லி இலையையும் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்..
*வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து கரகரப்பான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* கழுவிய மீனை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
*அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடேறியவுடன் வெந்தயம் தாளித்து ,பச்சை மிளகாய் கறிவேப்பிலை, , மல்லி இலை போட்டு வதக்கவேண்டும் .பிறகு மீதமுள்ள வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி மிளகாய்ப் பொடி ,மல்லி பொடி ,சீரக பொடி,உப்பு ,மஞ்சள் சேர்த்து எண்ணெய் மிதக்கும் அளவு நன்கு வதக்கவும்
*புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பின் தணலை மிதமாக்கவும்.பதினைந்து நிமிடம் மிதமாக தீயில் வைத்து பச்சை மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.பின் எண்ணெய் மிதந்து வரும் நேரத்தில் மீன் சேர்த்து வேக வைக்கவேண்டும்
*அதிக நேரம் வேக வைத்தால் மீன் துண்டுகள் உடைந்து விடும்.
*மீன் துண்டுகள் உடையும் முன் இறக்கவும்
*சுவையான மீன் குழம்பு ரெடி
Comments
Post a Comment