கொத்தவரங்காய் வத்தல் குழம்பு
தக்காளி,கடுகு,கருவேப்பிலை,வெங்காயம்,தேங்காய்,புளி.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொத்தவரங்காய் வத்தலை போட்டு வறுத்து முக்கால் பாகம் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு. கருவேப்பிலை, பொரிந்ததும்,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதக்கியதும் மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
இத்துடன் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இத்துடன் கொத்தவரங்காய் வத்தலை சேர்த்து வேக வைத்து மல்லிதழை தூவி இறக்க வேண்டும்.
சுவையான கொத்தவரங்காய் வத்தல் குழம்பு ரெடி !
Comments
Post a Comment