சுண்டவத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
சாம்பார் வெங்காயம்,தக்காளி,கடுகு,கருவேப்பிலைபுளி கரைசல்.
வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,சுண்ட வத்தல்,சேர்த்து நன்கு வதக்க வேண்டும் இதை விழுதாக அரைக்க வேண்டும்.
செய்முறை
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
அத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதக்கியதும் மஞ்சள்,மிளகு,மல்லி பொடி அரைத்த விழுது சேர்த்து வதக்கி அவற்றில் புளிகரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
சுவையான சுண்டவத்தல் குழம்பு ரெடி.
Comments
Post a Comment