கருணை கிழங்கு குழம்பு
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.கடுகு,கருவேப்பிலை,தேங்காய் வெங்காயம்,தக்காளி .
புளியை ஊற வைத்து கரைத்து வைக்க வேண்டும்.மஞ்சள்,மல்லி பொடி,வத்த பொடி,மல்லி இலை.
செய்முறை
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் மஞ்சள்,வத்தல் பொடி,மல்லி பொடி உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலா எண்ணெய் பிரிந்து வரும் போது வேகவைத்த கருணை கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
கருணை கிழங்கை சேர்த்த உடனே புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இத்துடன் தேங்காய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
கருணை கிழங்கு குழம்பு ரெடி!.
Comments
Post a Comment