பருப்பு உருண்டை குழம்பு
சாம்பார் வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பருப்புடன் சீரகம்,வத்தல்,பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.
மையாக அரைகாமல் கரகரப்பாக அரக்க வேண்டும்.
இதனை உருண்டைகளாக உருட்டி இட்லி மாதிரி அவித்து எடுத்து கொள்ள வேண்டும்.
தேங்காய் மையாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
செய்முறை
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அவற்றில் கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அத்துடன் மிளகு,மல்லி பொடி,மஞ்சள்,வத்தல் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
புளி கரைசலை சேர்த்து நன்கு கொதித்ததும் தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உருண்டைகளை சேர்க்க வேண்டும்.
சுவையான உருண்டை குழம்பு ரெடி!.
Comments
Post a Comment