சுண்டல் குழம்பு
தேவையான பொருட்கள்
சாம்பார் வெங்காயம்,தேங்காய் தக்காளி,கடுகு,கருவேப்பிலை.
சுண்டலை ஒரு மணிநேரம் ஊற வைத்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ள வேண்டும்.மஞ்சள்,மல்லி பொடி,வத்த பொடி மசாலா பொடி,இஞ்சி பூண்டு விழுது .
செய்முறை
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் மஞ்சள்,வத்தல் பொடி,மல்லி பொடி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
புளிகரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அரைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
சுவையான சுண்டல் குழம்பு ரெடி !.
Comments
Post a Comment