எங்கே தமிழ்
























சுடர் ஒளி ஏற்றினாய்
தமிழுக்கு

பெண் உணர்வுக்கு
மதிப்பு கொடுத்தாய்

வீரம் வேண்டும் என்றாய்
 நாட்டுக்காக போராட

விவேகம்  வேண்டும் என்றாய்
 நம் மொழியை காப்பாற்ற

நான் கேட்கிறேன்
பாரதியே நீ  எங்கே

இங்கே ஆங்கிலம் பாதாளம்
 வரை பாய்கிறது

நம் தாய்மொழியான
தமிழோ ஏட்டுசுவடியிலே
மறைந்து விடுமோ ?
என தெரியவில்லை
துடிக்கவில்லை
என் இதயம்
கலங்குகிறது
என் உள்ளம்

பாரதியே நீ எங்கே
வா தமிழை காப்பாற்றுவோம்
ஒன்று சேர்ந்து

Comments

Popular Posts