தெய்வம்
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்-அதனால்தான்
அவர்கள் இருப்பது
முதியோர் இல்லமோ ?????............
வசதியான வாழ்க்கை
கட்டு கட்டாய் பணம்
பல ஏக்கர் நிலத்தில் வீடு
தன்னை பத்து மாதம்
பெற்று எடுத்த அன்னைக்கு
அவர்கள் வீட்டு
திண்ணையில் கூட இடம் இல்லை
நிலவை காட்டி
சோறு ஊட்டிய அன்னையோ
இன்று பிறர் கையை ஏந்தி இருக்கிறாள்
இதுஎன்ன கொடுமை
பல வண்ண விலைஉயர்ந்த ஆடையை
தன்குழந்தைக்கு அணிவித்து மகிழ்ந்தால்
மாற்று துணியில்லாமல்
கிழிந்த சல்லடையாய்
வலம் வரும் எத்தனை தெய்வங்களோ
தெரியவில்லை ..............
Comments
Post a Comment