மனம் தொட்டவை
பௌர்ணமி நிலவில்
மகாபலிபுரம்
அமாவாசை இரவில்
கொட்டும் அருவி
காலைநேர கடலோர தென்னைமரம்
மாலைநேர தென்றல்
ஆர்பரிக்கும் அழகு
உன்னருகில் நான்
என்னருகில் நீ
அழகுக்கே அழகு சேர்க்கும்
சிரிக்கும் மூதாட்டி
கொஞ்சி கொஞ்சி பேசு மழலை
வாசம் வீசும் பூங்காவனம்
அன்னையின் முத்தம்
நட்பின் பரிசம்
காதலிக்கும் இன்பம்
சாதியில்லா சமுதாயம்
மதமில்லாத மனிதர்கள்
தீண்டாமையில்லா தினங்கள்
உயர்வு தாழ்வில்லாத உள்ளங்கள்..................
இன்னும் தொடரும் என்
மனம் தொட்டவை ..................
Comments
Post a Comment