காதல் தவம்
நேற்று பார்த்து
இன்று வந்தவை அல்ல
என் காதல்
தவமாய் தவமிருந்து
அணு அணுவாய்
உனை ரசித்து !
தூரத்தில் நின்றே
மனதை பறிக்கொடுத்ததுதான்
என் காதல்
கருவறை குழந்தையை கூட
பத்து மாதம் தான்
சுமக்கிறாள் தாய்-ஆனால்
உன்னை நான் சுமந்ததோ
5-வருடங்கள்
நாளையோடு 6-வது வருடம்
இன்றாவது உன்னை
பார்த்து சொல்ல துடிக்கிறேன்
என் காதலை எனக்குள் இருக்கும்
என் காதலை......
Comments
Post a Comment